pallivasalmurasu.bsky.social
@pallivasalmurasu.bsky.social
3 followers 1 following 2.7K posts
Posts Media Videos Starter Packs
SIR-க்கு எதிராக முழு வீச்சில் தமிழகம்.! இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.! தேர்தல் ஆணையம் அடங்குமா, அடக்குமா.?

இந்தியாவில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. முதலில் பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்…
SIR-க்கு எதிராக முழு வீச்சில் தமிழகம்.! இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.! தேர்தல் ஆணையம் அடங்குமா, அடக்குமா.?
இந்தியாவில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. முதலில் பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு மொத்தமுள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதால் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையே தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. SIR என்னும் பெயரில் மத்திய பாஜக அரசு வாக்குத்திருட்டு சதியில் ஈடுபடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டின.
pallivasalmurasu.wpcomstaging.com
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்த தடை: முதல்வர் அதிரடி உத்தரவு

அரசு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்த தடை விதித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அரசு நிறுவனமான நந்தினியின் தயாரிப்புகளை வாங்கி கட்டாயம்…
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்த தடை: முதல்வர் அதிரடி உத்தரவு
அரசு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்த தடை விதித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அரசு நிறுவனமான நந்தினியின் தயாரிப்புகளை வாங்கி கட்டாயம் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று மத்திய மற்றும் ஒவ்வொரு மாநில அரசுகள் கூறி வருகின்றன. ஏனென்றால் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. கர்நாடகாவிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
pallivasalmurasu.wpcomstaging.com
கிணற்றில் போட்ட கல் போல.. ஆவண எழுத்தர் தேர்வு ஏன் தாமதம்? பத்திரப்பதிவுக்கு நெருக்கடி என பெயிரா கோரிக்கை!

தமிழகத்தில் நீண்டகாலமாக ஆவண எழுத்தர் பற்றாக்குறை கடுமையாக நிலவிவருகிறது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்களின் பணிகள் தாமதமாவதுடன், அரசுக்கு வரவேண்டிய வருவாய் கூட பாதிக்கப்படுகிறது. இதனை…
கிணற்றில் போட்ட கல் போல.. ஆவண எழுத்தர் தேர்வு ஏன் தாமதம்? பத்திரப்பதிவுக்கு நெருக்கடி என பெயிரா கோரிக்கை!
தமிழகத்தில் நீண்டகாலமாக ஆவண எழுத்தர் பற்றாக்குறை கடுமையாக நிலவிவருகிறது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்களின் பணிகள் தாமதமாவதுடன், அரசுக்கு வரவேண்டிய வருவாய் கூட பாதிக்கப்படுகிறது. இதனை சரிசெய்யும் நோக்கில், ஆவண எழுத்தர் தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (PAIRA) தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 27 ஆண்டுகளாக ஆவண எழுத்தர் தேர்வுகள் நடைபெறவில்லை என்பதே முக்கிய பிரச்சினை என அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவுத்துறை 2022ல் வெளியிட்ட அரசாணை எண் 158-ன் படி, ஆவண எழுத்தர் உரிமம் வழங்க தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தாலும், மூன்று ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
pallivasalmurasu.wpcomstaging.com
ஆந்திரா: வெங்கடேஸ்வரர் கோவிலில் கூட்ட நெரிசல் – 10 பேர் பலி, பலர் காயம்

அமராவதி:ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் இன்று (சனிக்கிழமை) திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர்…
ஆந்திரா: வெங்கடேஸ்வரர் கோவிலில் கூட்ட நெரிசல் – 10 பேர் பலி, பலர் காயம்
அமராவதி:ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் இன்று (சனிக்கிழமை) திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோவில் ஆந்திரா மட்டுமன்றி தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் திரளாக தரிசனத்திற்கு வரும் பிரசித்தி பெற்ற தலமாகும். இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். மேலும் விரைவில் கார்த்திகை மாதம் தொடங்கவுள்ளதையும், ஏகாதசி பண்டிகை கொண்டாட்டம் நடைபெறவுள்ளதையும் முன்னிட்டு, பக்தர்கள் பெருமளவில் கூடினர்.
pallivasalmurasu.wpcomstaging.com
“அன்பு காட்டுங்க… ஆனால் பாதுகாப்பாக!” — ரசிகர்களுக்கு அஜித்தின் முக்கிய அறிவுரை

சென்னை: தமிழ்நாட்டில் முதல்நாள் முதல் காட்சியில் (FDFS) ரசிகர்கள் காட்டும் அதீத உற்சாகத்துக்கு இனி ஆதரவு அளிக்கக் கூடாது என்று நடிகர் அஜித் குமார் உறுதியான முறையில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த நேர்காணலில் அவர்,…
“அன்பு காட்டுங்க… ஆனால் பாதுகாப்பாக!” — ரசிகர்களுக்கு அஜித்தின் முக்கிய அறிவுரை
சென்னை: தமிழ்நாட்டில் முதல்நாள் முதல் காட்சியில் (FDFS) ரசிகர்கள் காட்டும் அதீத உற்சாகத்துக்கு இனி ஆதரவு அளிக்கக் கூடாது என்று நடிகர் அஜித் குமார் உறுதியான முறையில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த நேர்காணலில் அவர், “இது சினிமாவின் பெருமையை குறைக்கும் செயல்” என வலியுறுத்தியுள்ளார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த அஜித்தின் பேட்டி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விரிவான பேட்டி அளித்துள்ளார். ‘Good Bad Ugly’ திரைப்படத்தின் பணிகளை முடித்தபின், தற்போது அவர் தனது ரேசிங் குழுவில் (Racing Team) தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
pallivasalmurasu.wpcomstaging.com
அஜித்: “என்னைப் போன்றவனுடன் வாழ்வது எளிதல்ல!” — ஷாலினியின் தியாகம் குறித்து நெகிழ்ந்த அஜித்! ரகசியம் வெளிச்சம்

சென்னை: தமிழ் திரையுலகில் தனித்துவமான ஆளுமை, எளிமை மற்றும் நேர்மையான பேச்சுக்காக ரசிகர்களால் “தல” என அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கையின்…
அஜித்: “என்னைப் போன்றவனுடன் வாழ்வது எளிதல்ல!” — ஷாலினியின் தியாகம் குறித்து நெகிழ்ந்த அஜித்! ரகசியம் வெளிச்சம்
சென்னை: தமிழ் திரையுலகில் தனித்துவமான ஆளுமை, எளிமை மற்றும் நேர்மையான பேச்சுக்காக ரசிகர்களால் “தல” என அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கையின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வெற்றியின் பின்னால் உள்ள சக்தி, அவரது மனைவி ஷாலினி தான் என்று அஜித் பெருமையுடன் கூறியுள்ளார். அஜித்தின் நெகிழ்ச்சியான வார்த்தைகள் “நான் ஷாலினிக்குக் கடமைப்பட்டவன். ரேஸிங்கிலும், சண்டைக் காட்சிகளிலும் நேரடியாக பங்கேற்கிறேன். என்னைப் போன்றவருடன் வாழ்வது எளிதல்ல. ஆனாலும் ஷாலினி எப்போதும் எனக்கு துணையாக இருந்துள்ளார். அவர் இல்லாமல் என் வாழ்க்கை சாத்தியமாகியிருக்காது.”
pallivasalmurasu.wpcomstaging.com
“கூட்ட நெரிசலுக்கு ஒரே நபர் காரணமல்ல” – அஜித் கருத்துக்கு தவெக தரப்பில் நன்றி!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் அளித்த கருத்து, அரசியல் வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அஜித் குமார், “கரூரில்…
“கூட்ட நெரிசலுக்கு ஒரே நபர் காரணமல்ல” – அஜித் கருத்துக்கு தவெக தரப்பில் நன்றி!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் அளித்த கருத்து, அரசியல் வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அஜித் குமார், “கரூரில் நடந்த கூட்ட நெரிசலுக்கு ஒரே நபரை மட்டும் குறை சொல்ல முடியாது. நாமெல்லாரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒரு சமூகமாக நாம் கூட்ட நெரிசலை பெருமைப்படுத்தும் கலாச்சாரத்தில் மூழ்கி விட்டோம். இது நிறுத்தப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: “கிரிக்கெட் போட்டிகளிலும் பெரிய அளவிலான கூட்டம் வரும், ஆனால் அங்கெல்லாம் இப்படிப்பட்ட விபத்துகள் நடப்பதில்லை.
pallivasalmurasu.wpcomstaging.com
வங்கிக் கணக்கு விதிமுறையில் பெரும் மாற்றம் — இனி 4 வாரிசுகளை நியமிக்கலாம்!

உரிமை கோரப்படாத வங்கி பணம் இனி குடும்பத்தினருக்கே செல்லும் — இன்று முதல் புதிய நடைமுறை அமலில் சென்னை:நவம்பர் 1 முதல், இந்தியாவின் அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்புப் பொருளுக்கு…
வங்கிக் கணக்கு விதிமுறையில் பெரும் மாற்றம் — இனி 4 வாரிசுகளை நியமிக்கலாம்!
உரிமை கோரப்படாத வங்கி பணம் இனி குடும்பத்தினருக்கே செல்லும் — இன்று முதல் புதிய நடைமுறை அமலில் சென்னை:நவம்பர் 1 முதல், இந்தியாவின் அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்புப் பொருளுக்கு அதிகபட்சம் 4 பேரை வாரிசுகளாக (Nominees) நியமிக்கலாம் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வாடிக்கையாளர் மரணம் அல்லது கணக்கைச் சம்பந்தப்படுத்த முடியாத சூழ்நிலையில் குடும்பத்தினருக்கு பணம் அல்லது சொத்துக்களை எளிதாகப் பெற உதவும் விதமாக அமைகிறது. ஏன் இந்த மாற்றம் அவசியம்? பலரும் வங்கிக் கணக்குகள், நிரந்தர வைப்புத் தொகைகள் (Fixed Deposits), அல்லது லாக்கர்களைத் துவங்கும் போது ஒரே ஒருவரையே நியமிக்கிறார்கள்.
pallivasalmurasu.wpcomstaging.com
கரூரில் கூட்ட நெரிசல் விபத்து – வேலுச்சாமிபுரத்தில் 2வது நாளாக சிபிஐ தீவிர விசாரணை!

கரூர்: தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த…
கரூரில் கூட்ட நெரிசல் விபத்து – வேலுச்சாமிபுரத்தில் 2வது நாளாக சிபிஐ தீவிர விசாரணை!
கரூர்: தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்து இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. பிரவீன் குமார் தலைமையில் இயங்கும் சிபிஐ குழு, நேற்று முதல் வேலுச்சாமிபுரத்தில் நேரடி ஆய்வு மற்றும் சாட்சிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தது. நேற்று, கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட பலர் விசாரணைக்கு ஆஜரானனர்.
pallivasalmurasu.wpcomstaging.com
உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகமா போச்சா? இதோ சூப்பர் டிப்ஸ்!

சென்னை: உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது தவறுதலாக தண்ணீர் அதிகமாகி விட்டதா? கவலைப்பட வேண்டாம் — இதோ அதை சரி செய்வதற்கான சில அற்புதமான டிப்ஸ்! வடை என்றால் ரசிக்காதவர்கள் அரிது. குறிப்பாக, மசால் வடையை விட உளுந்து வடை…
உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகமா போச்சா? இதோ சூப்பர் டிப்ஸ்!
சென்னை: உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது தவறுதலாக தண்ணீர் அதிகமாகி விட்டதா? கவலைப்பட வேண்டாம் — இதோ அதை சரி செய்வதற்கான சில அற்புதமான டிப்ஸ்! வடை என்றால் ரசிக்காதவர்கள் அரிது. குறிப்பாக, மசால் வடையை விட உளுந்து வடை பலரின் மனதில் தனி இடம் பிடித்துள்ளது. புசுபுசு என உப்பி சாப்பிடும் உளுந்து வடை சுவையில் தனி ருசி உண்டு. உளுந்து மாவில் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து செய்வது ஒரு வழி. சிலர் மிளகை முழுதாகவே போட்டு சுடுவார்கள் – அந்த முறையிலும் சுவை வித்தியாசமாக இருக்கும்.
pallivasalmurasu.wpcomstaging.com
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இந்தியா vs தென்னாப்பிரிக்கா — முதல் முறையாக சாம்பியன் பட்டம் நோக்கி வரலாறு படைக்கப் போகும் அணி!

மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை (நவம்பர் 2, ஞாயிற்றுக்கிழமை) நவி மும்பையில் நடைபெறுகிறது. இதில் இந்திய மகளிர் அணி மற்றும்…
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இந்தியா vs தென்னாப்பிரிக்கா — முதல் முறையாக சாம்பியன் பட்டம் நோக்கி வரலாறு படைக்கப் போகும் அணி!
மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை (நவம்பர் 2, ஞாயிற்றுக்கிழமை) நவி மும்பையில் நடைபெறுகிறது. இதில் இந்திய மகளிர் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோதவிருக்கின்றன. இரு அணிகளும் இதுவரை மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை கைப்பற்றாததால், இந்த முறை புதிய சாம்பியன் பிறக்கப் போகிறது என்பது சிறப்பாகும். இந்திய அணி, அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. மகளிர் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு பெரிய இலக்கை இந்தியா வெற்றிகரமாக அடைந்தது குறிப்பிடத்தக்கது.
pallivasalmurasu.wpcomstaging.com
தான்சானியாவில் அதிர்ச்சி வன்முறை: 700 பேர் பலி என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

டொடோமா:கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து வெடித்த வன்முறை, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் கூறுவதன்படி, கடந்த மூன்று நாட்களில் 700க்கும் மேற்பட்டோர்…
தான்சானியாவில் அதிர்ச்சி வன்முறை: 700 பேர் பலி என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
டொடோமா:கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து வெடித்த வன்முறை, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் கூறுவதன்படி, கடந்த மூன்று நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது. அந்த நாடில் அக்டோபர் 29ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபரான சமியா சுலுஹூ ஹசன் (CCM கட்சி) வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் எதிர்க்கட்சி சடேமா, “தேர்தலில் மோசடி நடந்தது” என குற்றஞ்சாட்டி, முடிவை நிராகரித்தது. இதையடுத்து நாடு முழுவதும் …
pallivasalmurasu.wpcomstaging.com
அதிமுகவில் அதிர்ச்சி! நீக்கத்துக்கு பின் செங்கோட்டையன் வெளியிடும் ‘அணுகுண்டு’ ஆடியோ – குள்ளம்பாளையத்தில் பரபரப்பு!

கோபிச்செட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் ஒரு முக்கியமான ஆடியோ…
அதிமுகவில் அதிர்ச்சி! நீக்கத்துக்கு பின் செங்கோட்டையன் வெளியிடும் ‘அணுகுண்டு’ ஆடியோ – குள்ளம்பாளையத்தில் பரபரப்பு!
கோபிச்செட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் ஒரு முக்கியமான ஆடியோ பதிவையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவரது இல்லத்தில் பிரத்யேக ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் பசும்பொன்னில் செங்கோட்டையன் கை கோர்த்ததையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்க உத்தரவிட்டிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இன்று காலை 11 மணிக்கு விளக்கம் அளிக்கிறேன்” என செங்கோட்டையன் தெரிவித்தார்.
pallivasalmurasu.wpcomstaging.com
வால்பாறை சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்: இன்று முதல் நடைமுறை – ஆழியார் செக் போஸ்டில் தீவிர சோதனை

கோவை:பிரபல மலைப்பகுதி சுற்றுலா தலமான வால்பாறையில் இன்று (நவம்பர் 1) முதல் இ-பாஸ் (E-Pass) நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கான தீவிர…
வால்பாறை சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்: இன்று முதல் நடைமுறை – ஆழியார் செக் போஸ்டில் தீவிர சோதனை
கோவை:பிரபல மலைப்பகுதி சுற்றுலா தலமான வால்பாறையில் இன்று (நவம்பர் 1) முதல் இ-பாஸ் (E-Pass) நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கான தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இ-பாஸ் இல்லாமல் வால்பாறைக்கு எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இ-பாஸ் நடைமுறை — நீதிமன்ற உத்தரவின் பேரில்ஊட்டி மற்றும் கொடைக்கானல் போலவே, கோவை மாவட்டத்தின் வால்பாறைக்குச் செல்லும் பயணிகளுக்கும் இ-பாஸ் அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆழியார் சோதனைச் சாவடி அருகே சுற்றுலா பயணிகள் வசதிக்காக …
pallivasalmurasu.wpcomstaging.com
பொங்கலுக்கு முன் ரேஷன் வீட்டுக்கு – இலவச வேட்டி, சேலை அறிவிப்பு… மகிழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்கள்!

முதலமைச்சரின் “தாயுமானவர் திட்டம்” கீழ் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் பணிகள் நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தொடங்க உள்ளன. வடகிழக்கு பருவமழை…
பொங்கலுக்கு முன் ரேஷன் வீட்டுக்கு – இலவச வேட்டி, சேலை அறிவிப்பு… மகிழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்கள்!
முதலமைச்சரின் “தாயுமானவர் திட்டம்” கீழ் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் பணிகள் நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தொடங்க உள்ளன. வடகிழக்கு பருவமழை காரணமாக அரசு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னையில் நவம்பர் 3 முதல் 6 வரை அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களில் 990 நியாய விலைக் கடைகள் வழியாக வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்.
pallivasalmurasu.wpcomstaging.com
மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன்: சபரிமலை தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

திருவனந்தபுரம்:மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான இணைய வழி டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 1) மாலை 5 மணி முதல் தொடங்குகிறது என்று திருவிதாங்கூர் தேவஸ்வம்…
மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன்: சபரிமலை தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!
திருவனந்தபுரம்:மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான இணைய வழி டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 1) மாலை 5 மணி முதல் தொடங்குகிறது என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது. இதனுடன் பக்தர்களுக்கான விபத்து காப்பீட்டு (இன்சூரன்ஸ்) திட்டமும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. சபரிமலை சீசன் தொடக்கம் இந்தாண்டுக்கான சபரிமலை மண்டல பூஜை சீசன் வரும் நவம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது.அதற்கான நடை நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு
pallivasalmurasu.wpcomstaging.com
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு! இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

சென்னை:தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்காக (e-verification) தங்களது சான்றிதழ்களை…
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு! இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்
சென்னை:தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்காக (e-verification) தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள். இதில் தேர்வர்களுக்கு சில பொதுவான தவறுகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கவும், தெளிவான வழிகாட்டலாகவும், டிஎன்பிஎஸ்சி சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. முக்கிய அறிவுறுத்தல்கள் பதிவேற்றத்தின் கடைசி தேதி:நவம்பர் 7-ஆம் தேதிக்குள் அனைத்து தேர்வர்களும் தங்களது சான்றிதழ்களை One Time Registration (OTR) வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
pallivasalmurasu.wpcomstaging.com
நவம்பர் 1 தங்கம், வெள்ளி விலை புதுப்பிப்பு – எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னை: நவம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று (நவம்பர் 1) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சிறிய அளவில் உயர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480 ஆகவும், கிராமுக்கு ரூ.10…
நவம்பர் 1 தங்கம், வெள்ளி விலை புதுப்பிப்பு – எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
சென்னை: நவம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று (நவம்பர் 1) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சிறிய அளவில் உயர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480 ஆகவும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,310 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் ஏற்றம் கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.166 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,66,000 ஆகவும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார சந்தைகளில் ஏற்பட்டுள்ள பரபரப்பு இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா மற்றும் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் போன்றவை உலக நாடுகளை தங்கத்தை அதிகமாக வாங்கத் தூண்டியுள்ளன.
pallivasalmurasu.wpcomstaging.com
பென்ஷன் முதல் ஆதார் அப்டேட் வரை… நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் 7 புதிய விதிகள் — மக்களே தவற விடாதீங்க!

அக்டோபர் மாதம் இன்று முடிவுக்கு வருகிறது. நாளை நவம்பர் 1 தொடங்கும் நிலையில், ஆதார், வங்கி, ஜிஎஸ்டி, பென்ஷன் உள்ளிட்ட துறைகளில் பல முக்கியமான புதிய விதிகள் நடைமுறைக்கு வருகிறது. அவை என்னென்ன…
பென்ஷன் முதல் ஆதார் அப்டேட் வரை… நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் 7 புதிய விதிகள் — மக்களே தவற விடாதீங்க!
அக்டோபர் மாதம் இன்று முடிவுக்கு வருகிறது. நாளை நவம்பர் 1 தொடங்கும் நிலையில், ஆதார், வங்கி, ஜிஎஸ்டி, பென்ஷன் உள்ளிட்ட துறைகளில் பல முக்கியமான புதிய விதிகள் நடைமுறைக்கு வருகிறது. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம். ஆதார் அப்டேட் இலவசம்:குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பயோமெட்ரிக் அப்டேட்டுக்கு இதுவரை ரூ.125 கட்டணம் இருந்தது. ஆனால் நாளை முதல் ஒரு வருடத்துக்கு இலவசமாக செய்யலாம். மற்ற விவரங்கள் — பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்றவற்றை மாற்ற ரூ.75 கட்டணம் தொடர்கிறது. பயோமெட்ரிக் அப்டேட்டுகளுக்கான கட்டணம் ரூ.125 ஆகவே இருக்கும்.
pallivasalmurasu.wpcomstaging.com
நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் — சிலிண்டர் விலையிலிருந்து ஆதார், வங்கி நாமினிகள் வரை

சென்னை / இந்தியா — நவம்பர் 1, 2025நாளைக்(நவம்பர் 1) முதல் நாடு முழுவதும் பல முக்கிய விதிமாற்றங்கள் மற்றும் நடைமுறைகள் அமலுக்கு வரும். இவை பொதுமக்களின் அன்றாடச் செலவுக்கும் நிர்வாகப்…
நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் — சிலிண்டர் விலையிலிருந்து ஆதார், வங்கி நாமினிகள் வரை
சென்னை / இந்தியா — நவம்பர் 1, 2025நாளைக்(நவம்பர் 1) முதல் நாடு முழுவதும் பல முக்கிய விதிமாற்றங்கள் மற்றும் நடைமுறைகள் அமலுக்கு வரும். இவை பொதுமக்களின் அன்றாடச் செலவுக்கும் நிர்வாகப் பிரச்னைகளுக்கும் நேரடியான தாக்கம் ஏற்படுத்தச் செய்யும்; அவற்றை எப்படிச் செய்யவேண்டும் என்பதையும், குறுக்கீடுகளைத் தவிர்ப்பதற்கான செயல்பாடுகளையும் கீழே சுருக்கமாக வாசிக்கவும். முக்கிய செய்தி சுருக்கம் சிலிண்டர் விலை: மாதத்தின் முதல் நாளில் சிலிண்டர் விலை (LPG) புதுப்பிக்கப்படக்கூடும் — உயர்ந்தால் குடும்ப பட்ஜெட்டுக்கு தாக்கம் வரும். ஆதார் (Aadhaar) விதிமாற்றங்கள்:
pallivasalmurasu.wpcomstaging.com
ரூ.3,250 கோடி முதலீட்டுடன் இந்தியாவுக்கு மீண்டும் வருகிற ஃபோர்டு – டிரம்ப் எதிர்ப்பை மீறிய அம்பிஷஸ் ரீ-என்ட்ரி!

சென்னை:அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு மோட்டார் கம்பெனி (Ford Motor Company), இந்தியாவில் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க தீர்மானித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு…
ரூ.3,250 கோடி முதலீட்டுடன் இந்தியாவுக்கு மீண்டும் வருகிற ஃபோர்டு – டிரம்ப் எதிர்ப்பை மீறிய அம்பிஷஸ் ரீ-என்ட்ரி!
சென்னை:அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு மோட்டார் கம்பெனி (Ford Motor Company), இந்தியாவில் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க தீர்மானித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தொழிற்சாலையை மீண்டும் உயிர்ப்பித்து, ஏற்றுமதிக்கான உயர் ரக எஞ்சின்களை உற்பத்தி செய்ய ரூ.3,250 கோடி ($370 மில்லியன்) முதலீடு செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. மறைமலை நகர் ஆலையின் மறுசீரமைப்பு முதலீடு: ரூ.3,250 கோடி இடம்: தமிழ்நாடு, மறைமலை நகர் இலக்கு: ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உயர் திறன் எஞ்சின்கள் உற்பத்தி ஏற்றுமதி:
pallivasalmurasu.wpcomstaging.com
பெரும் நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா – ரூ.10,000 கோடி தேவை! காப்பாற்றுமா டாடா சன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்?

ஏர் இந்தியாவுக்கு பெரிய நிதி நெருக்கடி இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனை சமாளிக்க, அதன் உரிமையாளர்களான டாடா சன்ஸ்…
பெரும் நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா – ரூ.10,000 கோடி தேவை! காப்பாற்றுமா டாடா சன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்?
ஏர் இந்தியாவுக்கு பெரிய நிதி நெருக்கடி இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனை சமாளிக்க, அதன் உரிமையாளர்களான டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களிடமிருந்து குறைந்தபட்சம் ₹10,000 கோடி (சுமார் $1.14 பில்லியன்) நிதி உதவியை கோரியுள்ளது என்று ப்ளூம்பெர்க் நியூஸ் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிதி கோரிக்கை, ஜூன் மாதம் நடந்த பயங்கர விமான விபத்துக்குப் பிறகு வெளியானது. அந்த விபத்தில் 240க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர்
pallivasalmurasu.wpcomstaging.com
டிரம்ப் எச்சரிக்கைக்கு முன் மோடியின் ஸ்மார்ட் மூவ் — தங்கத்தை நாட்டிற்கு திருப்பி வாங்கிய ஆர்பிஐ!

ரஷ்யாவின் சர்வதேச சொத்துக்கள் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளால் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது வெளிநாட்டு தங்க முதலீடுகளை அவசரகால அடிப்படையில் நாட்டிற்குள் திருப்பி…
டிரம்ப் எச்சரிக்கைக்கு முன் மோடியின் ஸ்மார்ட் மூவ் — தங்கத்தை நாட்டிற்கு திருப்பி வாங்கிய ஆர்பிஐ!
ரஷ்யாவின் சர்வதேச சொத்துக்கள் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளால் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது வெளிநாட்டு தங்க முதலீடுகளை அவசரகால அடிப்படையில் நாட்டிற்குள் திருப்பி எடுக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. தற்போது ஆர்பிஐ தனது மொத்த தங்க இருப்புகளில் 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதியை இந்தியாவிலேயே வைத்துள்ளது — இது நான்கு ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இரு மடங்காக அதிகமாகும். உக்ரைன்–ரஷ்யா போருக்குப் பிறகு உலக பொருளாதார சூழல் சிக்கலான நிலையில், ரஷ்யாவுடன் வணிக உறவு கொண்டுள்ள நாடுகளின் சொத்துக்களும் முடக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
pallivasalmurasu.wpcomstaging.com
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! – ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி Pro 18 மாதங்கள் இலவசம்

ரிலையன்ஸ் ஜியோ – கூகுள் கூட்டணி அறிவிப்பு ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் கூகுள் (Google) இணைந்து புதிய அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளன. அக்டோபர் 30 முதல், 18 முதல் 25 வயது வரை உள்ள ஜியோ…
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! – ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி Pro 18 மாதங்கள் இலவசம்
ரிலையன்ஸ் ஜியோ – கூகுள் கூட்டணி அறிவிப்பு ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் கூகுள் (Google) இணைந்து புதிய அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளன. அக்டோபர் 30 முதல், 18 முதல் 25 வயது வரை உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.35,100 மதிப்புடைய Google Gemini Pro திட்டத்தை 18 மாதங்களுக்கு இலவசமாக பெற முடியும்.இந்த முயற்சி, இந்தியா முழுவதும் AI வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஜியோவின் “AI for All” நோக்கத்தின் ஒரு முக்கிய கட்டமாகும். இலவச ஜெமினி ப்ரோ திட்டத்தின் நன்மைகள்
pallivasalmurasu.wpcomstaging.com
உலகக் கோப்பை இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் அணி… சோகத்தில் வெளியேறிய ஆஸ்திரேலியா!

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி – இறுதிப்போட்டிக்குள் நுழைந்த வீராங்கனைகள்! நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை…
உலகக் கோப்பை இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் அணி… சோகத்தில் வெளியேறிய ஆஸ்திரேலியா!
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி – இறுதிப்போட்டிக்குள் நுழைந்த வீராங்கனைகள்! நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. இது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த ஸ்கோராகும்.
pallivasalmurasu.wpcomstaging.com